முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகள் பயணிகளின் வீடுகளுக்கு நேரில் விநியோகிக்கப்படும் - "கேஷ் ஆன் டெலிவரி" திட்டம் அறிமுகம்

இனி, முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகள் , பயணிகளின் வீடுகளில் நேரில் விநியோகிக்கப்படும் போது கட்டணம் செலுத்தும் வசதியை ரயில்வே நிர்வாகம் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, நெட்பேங்கிங், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாக கட்டணத்தை செலுத்தும் வசதி மட்டுமின்றி, டிக்கெட்டை பெறும்போது பணத்தை செலுத்தும், "கேஷ் ஆன் டெலிவரி" திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரி கூறியதாவது:- ஐஆர்சிடிசி இணையதளத்திலும், செல்லிடப் பேசி செயலியிலும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ரயிலில் பயணம் செய்ய விரும்பும் பயணி ஒருவர், டிக்கெட்டை மேற்கண்ட முறைகள் மூலம் முன்பதிவு செய்யும்போது இனிமேல் உடனடியாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, முன்பதிவின்போது பயணியால் அளிக்கப்படும் முகவரியில் டிக்கெட் நேரில் விநியோகிக்கப்படும்போது கட்டணத்தை அளித்தால் போதும். அந்த கட்டணத்தை ரொக்கமாகவோ, டிஜிட்டல் முறையிலோ அளிக்கலாம்.

முகவர், ரயில்வே கவுண்ட்டர் மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் முறையில் இருந்து பயணிகள் தாமாகவே இணையத்தில் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்க இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வசதியை பெறுவதற்கு, பணம் செலுத்துவதற்கான வழிகளில் ஒரேயொரு முறை மட்டும், டிக்கெட் வீடுகளில் நேரில் விநியோகிக்கும்போது கட்டணம் செலுத்தும் வசதி என்பதில் தங்களை சேர்க்க வேண்டும்.

இந்த வசதியை பெறுவதற்கு, வடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண் அல்லது பான் எண்ணை ஐஆர்சிடிசியில் பதிவு செய்திருக்க வேண்டும். 

ரூ.5 ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு சேவை வரி மற்றும் ரூ.90 கட்டணமாக பெறப்படும். ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு சேவை வரி மற்றும் ரூ.120 கட்டணமாக பெறப்படும். ஒருவேளை பயணிகள் முன்பதிவு டிக்கெட்டுகள், தங்களது வீடுகளில் விநியோகிக்கப்படும் முன் ரத்து செய்ய விரும்பினால், அதற்காக விநியோக கட்டணம், ரத்து செய்வதற்கான கட்டணத்தை தனியே அளிக்க வேண்டும் என்று ஐஆர்சிடிசி அதிகாரி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...